பாப்பான் ஓடை வாய்க்காலில் தூர்வாரும் பணி

சீர்காழி அருகே சட்டநாதபுரத்தில் உள்ள பாப்பான் ஓடை வாய்க்காலில் தூர்வாரும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

சீர்காழி அருகே சட்டநாதபுரத்தில் உள்ள பாப்பான் ஓடை வாய்க்காலில் தூர்வாரும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
பாப்பான் ஓடை  வாய்க்கால் மூலம் குமாரநத்தம், பனமங்களம், சட்டநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. இந்த வாய்க்காலை கடந்த சில ஆண்டுகளாக பொதுப்பணித் துறையினரால் தூர்வாரப்படாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்தனர். மேலும் பாப்பான் ஓடை வாய்க்காலை தூர்வார வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து, பாப்பான் ஓடை வாய்க்கால் பனமங்களம் முதல் சட்டநாதபுரம் வரை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் பொதுப்பணித் துறையினருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com