செப். 16-இல் நுகர்வோர் அமைப்புகளுக்கான ஆய்வுக் கூட்டம்: ஆட்சியர் தகவல்

நாகை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புக் குழு மற்றும் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுக்கான காலாண்டு

நாகை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புக் குழு மற்றும் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுக்கான காலாண்டு ஆய்வுக் கூட்டம் நாகையில் செப்டம்பர் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செப்டம்பர். 16-ஆம் தேதி மாலை 4 மணிக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறும் எனவும்,  நுகர்வோர் நலன் தொடர்பான புகார்களை இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நேரில் தெரிவித்து, தீர்வு பெறலாம் என தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com