நாகூரில் இன்று கடையடைப்புப் போராட்டம்

நாகூரில் நீண்ட காலமாக நிலவி வரும் குறைபாடுகளைப் போக்கி, வளர்ச்சிக்கான செயல்திட்டங்களை நிறைவேற்றக் கோரி

நாகூரில் நீண்ட காலமாக நிலவி வரும் குறைபாடுகளைப் போக்கி, வளர்ச்சிக்கான செயல்திட்டங்களை நிறைவேற்றக் கோரி நாகூரில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 24) முழு கடையடைப்புப் போராட்டம் நடைபெறும் என நாகூர் வணிக அமைப்புகள் 
தெரிவித்துள்ளன. 
நாகூர் கொத்தவாசல்சாவடி முகப்பில் (பெரியகடைத் தெரு) மழை நீர் தேங்காத வகையில் சாலை அமைக்க வேண்டும். கழிவு நீர் கலக்காத பாதுகாப்பான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும். முன்னறிவிப்பின்றி 200 முதல் 300 சதவீதம் வரை உயர்த்தப்பட்ட சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். சாலைகளை சீரமைக்க வேண்டும். நாகூர் மார்க்கத்தில் இயக்கப்படும் அனைத்துப் பேருந்துகளும் நாகூர் புதிய பேருந்து நிலையம் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நாகூர் தர்கா அலங்கார வாசலில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த வேண்டும். காரைக்கால் தனியார் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதியைக் கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.
நாகூர் வர்த்தகர் சங்கம், நாகூர் வணிகர் சங்கம், நாகூர் பாலத்தடி வர்த்தகர் சங்கம் ஆகிய அமைப்புகள் முழு கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com