குத்தாலம் பள்ளியில் ஹிந்தி தினவிழா அண்மையில் நடைபெற்றது.
ஹிந்தி திவாஸ் எனப்படும் ஹிந்தி தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 14 முதல் 28- ஆம் தேதி வரை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
அதன்படி, குத்தாலம் ராமாபுர அக்ரஹாரத்தில் உள்ள சுபிக் ஷா ஹிந்தி வித்யாலயாவில் ஹிந்தி தினவிழா நடைபெற்றது. உக்தவேதீசுவரர் சேவா சங்கத் தலைவர் பிரகாஷ் தலைமை
வகித்தார்.
நேரு யுவகேந்திரா அமைப்பாளார் விஜயகுமார் முன்னிலை வகித்தார். பாஜக மாவட்ட கூட்டுறவு பிரிவு தலைவர் கே. பட்டாபிராமன், ராஜ் வித்யாலயா பள்ளி தாளாளர் இரா.பாண்டியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சான்றிதழ்களையும், பரிசுகளையும் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் ஹிந்தி பயின்ற 114 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஆசிரியை ஆர். ஜானகி நன்றி கூறினார்.