தூய்மை இந்தியா விழிப்புணர்வுப் பேரணி

நாகையில் தூய்மை இந்தியா விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.


நாகையில் தூய்மை இந்தியா விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மற்றும் நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்வி நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற இப்பேரணியை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி.கே. ராஜசேகரன், கூடுதல் சார் ஆட்சியர் எம். பிரசாந்த், ஓ.என்.ஜி.சி. நிறுவன செயல் இயக்குநர் அனுராக் ஷர்மா ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடங்கிய பேரணி, தெற்குப் பால்பணைணைச்சேரி, வெளிப்பாளையம் வழியாகச் சென்று, நாகை புதிய  கடற்கரையில் நிறைவு பெற்றது. அங்கு மாணவர்கள் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டனர்.  ஓ.என்.ஜி.சி. நிறுவன மனிதவள மேலாளர் விஜயராஜ், நாகை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, ஒருங்கிணைப்பாளர் கண்ணன், ஓ.என்.ஜி.சி. நிறுவன அதிகாரிகள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com