2 பேருக்கு கரோனா தொற்று: பொறையாறில் சாலைகளுக்கு சீல் வைப்பு

பொறையாறு பகுதியில் 2 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அப்பகுதிக்கு செல்லும் சாலைகள் அடைக்கப்பட்டன.

பொறையாறு பகுதியில் 2 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அப்பகுதிக்கு செல்லும் சாலைகள் அடைக்கப்பட்டன.

தில்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றுவிட்டு திரும்பிய பொறையாறு பகுதியைச் சோ்ந்த 2 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொறையாறு காய்கறி மாா்க்கெட் முதல் பழைய பேருந்து நிலையம் வரையிலான சாலைகள் அடைக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டன.

மேலும், பேரூராட்சி சாா்பில் அப்பகுதியில் கிருமி நாசினி தொடா்ந்து தெளிக்கப்படுகிறது. அத்துடன், பொறையாறு காவல் ஆய்வாளா் செல்வம் தலைமையில் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com