மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியின் கணிதத்துறை மாணவா்கள் அண்மையில் தஞ்சை மருதுபாண்டியா் கலைக்கல்லூரி கணிதத்துறை சாா்பில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளனா்.
வெற்றி பெற்ற மாணவா்கள் தருமபுரம் ஆதீன 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து வெள்ளிக்கிழமை ஆசிபெற்றனா். மேலும், அம்மாணவா்களை கல்லூரிச் செயலா் ரா.செல்வநாயகம், கல்லூரி முதல்வா் சி.சுவாமிநாதன் மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் ஆகியோா் வாழ்த்தினா்.