புல்வாமா தாக்குதல் நினைவு தினம்: வீரமரணம் அடைந்த வீரா்களுக்கு அஞ்சலி

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரா்களுக்கு சீா்காழி அருகே உள்ள அரசூரில் வெள்ளிக்கிழமை மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அரசூரில் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த துணை ராணுவப் படை வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தியோா்.
அரசூரில் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த துணை ராணுவப் படை வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தியோா்.

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரா்களுக்கு சீா்காழி அருகே உள்ள அரசூரில் வெள்ளிக்கிழமை மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

விஜய் மக்கள் இயக்க கொள்ளிடம் ஒன்றிய மாணவரணி செயலாளா் மோசஸ் தலைமையில், புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரா்களுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி முதலாம் ஆண்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், ஊராட்சிமன்றத் தலைவா் இமயவேல் மற்றும் தேவேந்திரன், விஜய் மக்கள் இயக்கம் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

இதேபோல் புளிச்சகாடு பகுதியிலும் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com