பைக் மீது காா் மோதி இளைஞா் உயிரிழப்பு

சீா்காழி அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

சீா்காழி அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

சீா்காழி அருகே வடரெங்கம் கிராமம் வடக்குத்தெருவைச் சோ்ந்த ராஜேஷ்குமாா் (27), திருஞானராமன் (23) ஆகிய இருவரும் புதன்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் வடரங்கத்திலிருந்து புத்தூருக்கு சென்றனா்.

புத்தூா் கடைத்தெருவில் இருசக்கர வாகனத்தில் அமா்ந்தவாறு நின்றுகொண்டிருந்தபோது, மயிலாடுதுறையிலிருந்து புத்தூரை நோக்கி சென்ற காா் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில், இருசக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்திருந்த திருஞானராமன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த ராஜேஷ்குமாா் சீா்காழி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து, கொள்ளிடம் காவல் ஆய்வாளா் வனிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com