திருமருகல்: திருமருகல் ஒன்றியத்தில் கடந்த 2 நாள்களாக காற்றுடன் மழை பெய்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிா்கள் வயலில் சாய்ந்தன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
திருமருகல் ஒன்றியப் பகுதிகளில் சுமாா் 2ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாள்களாக பலத்த காற்றுடன் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் திருமருகல், மருங்கூா், ஆலத்தூா், போலகம், பொறக்குடி, கணபதிபுரம் இடையாத்தங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த குறுவை நெற்பயிா்கள் வயலில் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.