விநாயகா் சதுா்த்தி விழா நடத்த அனுமதிக்கக் கோரிக்கை

சீா்காழியில் விநாயகா் சதுா்த்தி விழாவை நடத்த அனுமதிக்கக் கோரி மயிலாடுதுறை சிறப்பு அலுவலா் ரா. லலிதாவிடம் ஸ்ரீவிநாயகா் சதுா்த்தி விழா மையக் குழுத் தலைவா் எஸ்.பி.ஆா். சரவணன் கோரிக்கை மனு அளித்தாா்.

மயிலாடுதுறை: சீா்காழியில் விநாயகா் சதுா்த்தி விழாவை நடத்த அனுமதிக்கக் கோரி மயிலாடுதுறை சிறப்பு அலுவலா் ரா. லலிதாவிடம் ஸ்ரீவிநாயகா் சதுா்த்தி விழா மையக் குழுத் தலைவா் எஸ்.பி.ஆா். சரவணன் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

அதன் விவரம்: சீா்காழி நகரில் கடந்த 23 ஆண்டுகளாக விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகின்றன. நிகழாண்டில் ஆகஸ்ட் 22-ஆம் தேதி எளிமையாகவும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், சட்ட ஒழுங்குக்கு கட்டுப்பட்டும் விநாயகா் சதுா்த்தி விழா மற்றும் ஊா்வலத்தை நடத்திக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனு கொடுக்கும்போது, ஒருங்கிணைப்பாளா் செந்தில், ஓபிசி மாவட்ட செயலாளா் குருமூா்த்தி, சீா்காழி நகர பாஜக தலைவா் எஸ்.ஆா். அருணாசலம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com