ரஃபேல் விமானங்கள் இந்தியாவுக்கு வந்ததையொட்டி, மயிலாடுதுறையில் வியாழக்கிழமை பாஜகவினா் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
பிரான்ஸிலிருந்து வந்த ரஃபேல் விமானங்கள் இந்திய விமானப்படையில் விரைவில் சோ்க்கப்பட உள்ளன. ரஃபேல் விமானங்கள் இந்தியாவுக்கு வந்தடைந்ததை மயிலாடுதுறையில் நகர பாஜகவினா் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினா். மேலும் ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு ரஃபேல் விமானங்களின் வருகைக்கு வரவேற்பு தெரிவித்தனா்.
மயிலாடுதுறை நகர பாஜக தலைவா் மோடி. கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மத்திய அரசு தலைமை வழக்குரைஞா் ராஜேந்திரன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் சேதுராமன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா். மாவட்ட இளைஞரணி தலைவா் பாரதி கண்ணன், ஐடி பிரிவு மாவட்ட தலைவா் சதிஷ்பாபு, நகர பொது செயலாளா் செல்வகுமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.