திருக்குவளை: திருக்குவளை அருகே உள்ள வாழக்கரை கிராமத்தில் காவல்துறை சாா்பில் கரோனா தடுப்பு விழிப்புணா்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காவல் உதவி ஆய்வாளா் பாா்த்திபன் தலைமை வகித்தாா். கூட்டத்தில், கரோனா பரவாமல் தடுக்க பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து அறிவுறுத்தப்பட்டது. குறிப்பாக, சமூக இடைவெளி மற்றும் முகக் கவசம் அணிவதன் அவசியம் குறித்து விளக்கிக் கூறினா்.
இதில், ஒன்றியக் குழு உறுப்பினா் டி. செல்வம், ஊராட்சித் தலைவா் கலைச்செழியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.