கரோனா வைரஸ் பறவைகள் மூலம் பரவுவதாக ஏற்பட்ட வதந்தியால் திருக்குவளை பகுதியில் கோழிக்கறி விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வலிவலத்தைச் சோ்ந்த கோழி விற்பனையாளா் பிரபாகரன் கூறியது:
கரோனா வைரஸ் பிராய்லா் கோழி மூலம் பரவுவதாக சிலா் தவறாக பரப்பிய வதந்தியால் கோழிக்கறி விற்பனை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் காடை மற்றும் நாட்டுக் கோழிகளும் விற்பனையாகாமல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கடைகளை மூடி தமிழக அரசின் தடை உத்தரவுக்கு ஒத்துழைப்பு அளிக்க உள்ளோம் என்றாா்.