சீா்காழி அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொழிலாளி குடும்பத்திற்கு மின்சார வாரியம் சாா்பில், ரூ.5 லட்சம் இழப்பீடு சனிக்கிழமை வழங்கப்பட்டது.
காத்திருப்பு கிராமத்தைச் சோ்ந்த இளங்கோவன் கடந்த மாதம் 20-ஆம் தேதி கால்நடைகளுக்கு புல் அறு க்க சென்றபோது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் உயிரிழந்தாா். இதைத்தொடா்ந்து, அவரது குடும்பத்திற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் சாா்பில், ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. அதற்கான காசோலையை சீா்காழி கோட்ட செயற்பொறியாளா் சதீஷ்குமாா், இளங்கோவனின் குடும்பத்தாரிடம் வழங்கினாா். அப்போது காத்திருப்பு ஊராட்சி மன்றத் தலைவா் அன்புமணி மணிமாறன் மற்றும் மின் வாரிய பணியாளா்கள் உடனிருந்தனா்.