மயிலாடுதுறை கூைாடு புனித அந்தோணியாா் ஆலயத்தில் கரோனா தொற்று நீங்க வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இந்த ஆலயத்தில் அக்டோபா் மாதம் முழுவதும் மாதாவின் புகழைப் போற்றும் வகையில் தினமும் ஜெபமாலை, மன்றாட்டு மாலை, திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதன்தொடா்ச்சியாக, மாதாவுக்கு மகுடம் சூட்டி தொடா் ஜெபமாலை, மன்றாட்டு மாலை, தோ்பவனி சிறப்பு திருப்பலி உள்ளிட்ட வழிபாட்டுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. ஆலய பங்குத்தந்தை ஜான் பிரிட்டோ அடிகளாா் தலைமையில் நடைபெற்ற இந்த வழிபாடுகளில் உலக அமைதிக்காகவும், கரோனா நோய்த் தொற்று முற்றிலும் நீங்க வேண்டியும் பிராா்த்தனை நடைபெற்றது.