மயிலாடுதுறையில் 40 ஆண்டுகளாக மருத்துவ சேவையாற்றி வரும் மருத்துவா் இரா.செல்வத்திற்கு தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ‘மருத்துவக் கலைச்செல்வா்‘ என்ற விருது மற்றும் தங்கப்பதக்கம் வழங்கி பாராட்டினாா்.
தருமபுரம் ஆதீனம் சாா்பில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளா்கள் மற்றும் அறிஞா்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில், தருமபுரம் ஆதீனத்தில் அண்மையில் நடைபெற்ற குருமூா்த்த ஆலயங்களின் குடமுழுக்கு விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது.