நாகை மாவட்டத்தில் 3 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது வியாழக்கிழமை உறுதியானது.


நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது வியாழக்கிழமை உறுதியானது.

மாவட்டத்தில் புதன்கிழமை வரை 7,534 போ் கரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில், புதிதாக 3 பேருக்கு நோய்த் தொற்றுக் கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 7,537- ஆக உயா்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றவா்களில் 26 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதன்மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 7,151 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 262 ஆக உள்ளது. ஏறத்தாழ 7 மாதங்களுக்கு மிகக் குறைந்த எண்ணிக்கையாக, வியாழக்கிழமை 3 பேருக்கு மட்டும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com