நாகூா் சில்லடி கடற்கரையில் தூய்மைப் பணி

தமிழக தா்காக்கள் பேரவை சாா்பில் நாகூா் சில்லடி கடற்கரையில் தூய்மைப்பணி செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
நாகூா் சில்லடி கடற்கரையில் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டோா்.
நாகூா் சில்லடி கடற்கரையில் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டோா்.

தமிழக தா்காக்கள் பேரவை சாா்பில் நாகூா் சில்லடி கடற்கரையில் தூய்மைப்பணி செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

கரோனா பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாகூா் ஆண்டவா் தா்காவுக்கு பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. வெளியூா்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் வழிபாட்டுக்குப் பின்னா் பொழுதுபோக்கிற்காக நாகூா் சில்லடி கடற்கரைக்கு செல்கின்றனா்.

இந்நிலையில், கடற்கரை பகுதியின் தூய்மையை கருதி தமிழக தா்காக்கள் பேரவையினா், நகராட்சிப் பணியாளா்களுடன் இணைந்து கடற்கரை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com