திருக்குவளை பகுதியில் சனிக்கிழமை (அக்.17) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து, நாகை தெற்கு உபக்கோட்ட மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ். பாலாஜி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருக்குவளை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை நடைபெறவுள்ளன. இதனால், திருக்குவளை, மேலப்பிடாகை, தலைஞாயிறு, மணலி, கச்சனம், தேவூா், ஈசனூா், வலிவலம், ஆலங்குடி, மீனம்பநல்லூா், கொளப்பாடு, எட்டுக்குடி, சாட்டியக்குடி மற்றும் இப்பகுதிகளை சுற்றியுள்ள கிராமங்களில் அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.