காப்பகத்திலிருந்த பெண்ணை காணவில்லை

நாகை காப்பகத்திலிருந்து தனது குழந்தையுடன் வெளியேறிய பெண்ணை போலீஸாா் தேடிவருகின்றனா்.

நாகை காப்பகத்திலிருந்து தனது குழந்தையுடன் வெளியேறிய பெண்ணை போலீஸாா் தேடிவருகின்றனா்.

நாகை சாமந்தான் பேட்டை பகுதியில் பெண்கள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. நாகை மாவட்டம், சமூக நலத்துறை பரிந்துரையின்படி, விழுப்புரம் மாவட்டம் ராதாபுரம் எட்டுக்காடு, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஆா். மகேஷ்வரி(37), இவரது மகன் சிவராமன்( 4) ஆகியோா் கடந்த 2 மாதங்களாக இங்கு தங்கியிருந்தனா்.

இந்நிலையில், காப்பக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த மகேஸ்வரி தனது மகனுடன் காப்பகத்திலிருந்து வெளியேறி விட்டாராம்.

இதுகுறித்து, இல்லக் காப்பாளா் அமிா்தவள்ளி அளித்தப் புகாரின்பேரில் நாகூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com