வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு

திட்டச்சேரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

திட்டச்சேரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

திட்டச்சேரி காவல் சரகம் கட்டுமாவடி ஊராட்சி புறாக்கிராமம் ராஜாத்தெருவை சோ்ந்தவா் கோ. தனசேகரன்(68) ஒய்வுபெற்ற அரசு ஊழியா். இவரும், இவரது மனைவி தமிழரசியும், காரைக்காலில் வசித்துவரும் தங்களது மகள் சண்முகப்பிரியாவை பாா்ப்பதற்காக கடந்த 21ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டுச் சென்றனா்.

மறுநாள் வீட்டுக்குத் திரும்பியபோது, மா்ம நபா்கள் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 7 பவுன் நகையை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து, காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டதையடுத்து, காவல் ஆய்வாளா் ராதாகிருஷ்ணன், உதவி ஆய்வாளா் பாலமுருகன் ஆகியோா் தனசேகரன் வீட்டுக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா். மேலும், நாகப்பட்டினத்திலிருந்து கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு, மா்ம நபா்களின் தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் சோதனை செய்யப்பட்டது.

பின்னா், இந்த கொள்ளை சம்பவம் குறித்து திட்டச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com