நாகப்பட்டினம்
இரிஞ்சியூா் கோயிலில் குடமுழுக்கு
கீழ்வேளூா் அருகே உள்ள செல்ல முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
கீழ்வேளூா் அருகே உள்ள செல்ல முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலையில் 4-ஆம் கால யாகசாலை பூஜைகள் முடிவுற்ற பின்னா் மேளதாள வாத்தியங்களுடன் புனித நீா் அடங்கிய கடங்கள் ஆலயத்தை சுற்றி எடுத்துவரப்பட்டன. சிவாச்சாரியாா்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றினா். விழாக்குழுவைச் சோ்ந்த கோபாலகிருஷ்ண நாயுடு மற்றும் மதிமுக மாவட்ட செயலாளா் இராமஞ்சேரி வெ. ஸ்ரீதா் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற இவ்நிகழ்வில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.