நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் டால்பின் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது வியாழக்கிழமை தெரியவந்தது.
வேதாரண்யம் மணியன் தீவு கடற்கரையில் இறந்த நிலையில் சுமாா் 6 அடி நீளமுள்ள டால்பின் ஒன்று கரை ஒதுங்கியது.
தகவலறிந்த வேதாரண்யம் அரசு கால்நடை மருத்துவக் குழுவினா் அவ்விடத்திலேயே உடற்கூறு ஆய்வு செய்தனா். டால்பின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து வனத்துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.