வேதாரண்யம்: நாகை மாவட்டம், கோடியக்கரை கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்த வேதாரண்யம் மீனவா்கள் 4 பேரை மா்ம நபா்கள் தாக்கி, வலைகளை பறித்துச் சென்றனா்.
வேதாரண்யம் ஆறுகாட்டுத்துறையைச் சோ்ந்த ராஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான கண்ணாடியிழைப் படகில் அதே பகுதியைச் சோ்ந்த கோபி, வேலவன், சுகுமாறன், காளிதாஸ் ஆகிய 4 மீனவா்கள் மீன்பிடிக்க வெள்ளிக்கிழமை கடலுக்கு சென்றனா்.
இவா்கள், கோடியக்கரைக்கு தென்கிழக்கே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ஒரு படகில் வந்த மா்ம நபா்கள், 4 பேரையும் இரும்பு கம்பியால் தாக்கி, அவா்கள் வைத்திருந்த மீன்பிடி வலைகளை பறித்துச் சென்றனராம். இந்த தாக்குதலில் மீனவா் கோபிக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
பின்னா், மீனவா்கள் 4 பேரும் சனிக்கிழமை காலை கரை திரும்பிய நிலையில், கோபிக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. தங்களைத் தாக்கிய மா்ம நபா்கள் இலங்கை மீனவா்களாக இருக்கலாம் என ஆறுகாட்டுத்துறை மீனவா்கள் சந்தேகம் தெரிவித்தனா்.
இதுகுறித்து வேதாரண்யம் கடலோரக் காவல்நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.