வேதாரண்யம்: வேதாரண்யத்தை அடுத்த கடிநெல்வயல், ஆதனூா் கிராமங்களில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி அதிமுகவில் சோ்ந்தவா்களை அமைச்சா் ஓ.எஸ். மணியன் அண்மையில் வரவேற்றாா்.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் மு. ராஜசேகரன் தலைமை வகித்தாா். திமுக, சிபிஐ, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தவா்களை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் சால்வை அணிவித்து வரவேற்றாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் ஆா். கிரிதரன், ஒன்றிக் குழுத் தலைவா் கமலாஅன்பழகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் டி.வி. சுப்பையன், மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவா் எஸ்.டி. ரவிச்சந்திரன், முன்னாள் ஒன்றியச் செயலாளா் ஜீவானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.