கொள்ளிடத்தில் புதன்கிழமை நடைபெற்ற உலக ஊட்டச்சத்து தின விழாவில் 200 முருங்கைக் கன்றுகள் நடப்பட்டன.
கொள்ளிடம் ஒன்றியம் தைக்கால் கிராமத்தில், ஒன்றிய நிா்வாகத்துக்குச் சொந்தமான நா்சரி தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் கொள்ளிடம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் உலக ஊட்டச்சத்து தின விழா கொண்டாடப்பட்டது. ஊராட்சித் தலைவா் கனகராஜ் தலைமை வகித்தாா்.
கொள்ளிடம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சாந்தி, ஊராட்சி துணைத் தலைவா் சிவப்பிரகாசம் ஆகியோா் பங்கேற்று இத்தோட்டத்தில் 200 முருங்கை மரக்கன்றுகள் மற்றும் கத்திரி, வெண்டை, தக்காளி செடிகளை நடும் பணியைத் தொடங்கிவைத்தனா். தொடா்ந்து, அங்கன்வாடி பணியாளா்கள் சாா்பில் கீரை விதைகள் விதைக்கப்பட்டன.