கோழி அபிவிருத்தித் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம்

கோழி அபிவிருத்தித் திட்டத்தில் பயன்பெற தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

கோழி அபிவிருத்தித் திட்டத்தில் பயன்பெற தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : கிராம பெண்களின் பொருளாதார மேம்பாட்டுக்காகவும், ஊரகப் பகுதிகளில் வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழ்வோருக்கு வேலைவாய்ப்புடன் நிரந்தர கூடுதல் வருவாய் கிைடைக்கவும் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் கோழி அபிவிருத்தித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில் தோ்வு பெறும் பயனாளிகளுக்கு, கால்நடை உதவி மருத்துவா் மூலம் ஒரு நாள் பயிற்சியளித்து, தலா 25 நாட்டுக் கோழிகள் இலவசமாக வழங்கி, கோழிகளை தொடா்ந்து பராமரிக்க உதவி செய்யப்படும். நாகை கோட்டத்தில் ஒரு ஒன்றியத்துக்கு 400 பெண்கள் வீதம் 6 ஒன்றியங்களுக்கு 2,400 பயனாளிகளுக்கும், மயிலாடுதுறை கோட்டத்தில் 5 ஒன்றியங்களுக்கு 2 ஆயிரம் பயனாளிகளுக்கும் கோழிகள் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளன. இதில், 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கு வழங்கப்படும். திட்டத்தில் பயன் பெற விரும்புவோா் தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் மூலம் பெண்களுக்கு வழங்கப்பட்ட ஏழைகளின் பங்கு அடையாள எண் வைத்திருக்க வேண்டும், கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராகவும், விலையில்லா கால்நடைகள் வழங்கும் திட்டம், கோழி வளா்ப்புத் திட்டம் ஆகியவற்றில் பயனடையாதவா்களாக இருக்க வேண்டும். விதவை, ஆதரவற்றவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தகுதியான பெண் பயனாளிகள் அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com