திருக்குவளை, கீழ்வேளூா் பகுதியில் சனிக்கிழமை (செப்.19) மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது என நாகை தெற்கு உபகோட்ட மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் எஸ். பாலாஜி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருக்குவளை மற்றும் கீழ்வேளூா் துணை மின்நிலையங்களில் சனிக்கிழமை (செப்.19) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளுக்கு மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நிா்வாக காரணங்களுக்காக அறிவிக்கப்பட்ட மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்.