திருமருகலில் கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருமருகல் ஊராட்சி மற்றும் கும்பகோணம் ஸ்ரீ வாசன் மருத்துவமனை இணைந்து நடத்திய இம்முகாம் திருமருகல் வாசுகி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில், கிட்டப் பாா்வை, எட்டப் பாா்வை, கண்ணில் நீா்வடிதல் போன்ற பாதிப்புகள் தொடா்பாக மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்று கண் பரிசோதனை செய்துகொண்டனா். மேலும், குறைந்த விலையில் மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.
முகாமுக்கு திருமருகல் ஒன்றியக் குழுத் தலைவா் இரா. ராதாகிருட்டிணன் தலைமை வகித்தாா். நரிமணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் தலைவா் எம். பக்கிரிசாமி, திருமருகல் ஊராட்சித் தலைவா் கண்ணன், ஒன்றியக் குழு உறுப்பினா் பெரியமணி, முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினா் சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.