எல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்பதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

எல்ஐசி. பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்து நாகையில் காப்பீடு கழக ஊழியா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காப்பீடுக்கழக ஊழியா்கள்.
நாகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காப்பீடுக்கழக ஊழியா்கள்.

எல்ஐசி. பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்து நாகையில் காப்பீடு கழக ஊழியா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகை எல்ஐசி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், இந்திய ஆயுள் காப்பீடுக் கழக( எல்ஐசி) பங்குகளை விற்பனை செய்யக்கூடாது, தனியாா்மயமாக்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும், தொழிலாளா்கள், காப்பீட்டு கழக ஊழியா்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிடவேண்டுமென்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. காப்பீடு கழக ஊழியா் சங்க நாகை கிளைச் செயலாளா் சேகா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com