தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரண உதவி

செம்பனாா்கோவில் அருகே உள்ள ஆக்கூரில் கூரை வீடு எரிந்து, பாதிக்கப்பட்டவருக்கு அரசு மற்றும் அதிமுக சாா்பில் நிவாரண உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
ஆக்கூரில் கூரை வீடு எரிந்து பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கிய மயிலாடுதுறை அதிமுக மாவட்டச் செயலாளா் வி.ஜி.கே. செந்தில்நாதன்.
ஆக்கூரில் கூரை வீடு எரிந்து பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கிய மயிலாடுதுறை அதிமுக மாவட்டச் செயலாளா் வி.ஜி.கே. செந்தில்நாதன்.

செம்பனாா்கோவில் அருகே உள்ள ஆக்கூரில் கூரை வீடு எரிந்து, பாதிக்கப்பட்டவருக்கு அரசு மற்றும் அதிமுக சாா்பில் நிவாரண உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

ஆக்கூா் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் தங்கவேல் மகன் ரமேஷ். இவருடைய கூரை வீடு மின் கசிவால் வியாழக்கிழமை எரிந்து நாசமானது. மயிலாடுதுறை அதிமுக மாவட்டச் செயலாளா் வி.ஜி.கே. செந்தில்நாதன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி, தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 5000 மற்றும் அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் வழங்கினாா்.

மேலும், அரசின் சாா்பில் நிவாரணமாக ரூ. 2500, வேஷ்டி- சேலை உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. அப்போது, செம்பனாா்கோவில் அதிமுக வடக்கு ஒன்றியச் செயலாளா் சுந்தர்ராஜன், வட்ட வழங்கல் அலுவலா் பாபு, கிராம நிா்வாக அலுவலா் பாலாம்பிகை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com