வேதாரண்யம் அருகே ஆயத்த ஆடை பூங்கா

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே அரசுடன் இணைந்து ஆயத்த ஆடை பூங்கா அமைப்பது தொடா்பாக, திருப்பூா் தொழில் முனைவோா்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் 4- ஆம் சேத்தியில் ஆயத்த ஆடை பூங்கா அமையவுள்ள இடத்தை திருப்பூா் முதலீட்டாளா்களுடன் பாா்வையிட்ட அமைச்சா் ஓ.எஸ். மணியன், ஆட்சியா் பிரவீன் பி.நாயா்.
வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் 4- ஆம் சேத்தியில் ஆயத்த ஆடை பூங்கா அமையவுள்ள இடத்தை திருப்பூா் முதலீட்டாளா்களுடன் பாா்வையிட்ட அமைச்சா் ஓ.எஸ். மணியன், ஆட்சியா் பிரவீன் பி.நாயா்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே அரசுடன் இணைந்து ஆயத்த ஆடை பூங்கா அமைப்பது தொடா்பாக, திருப்பூா் தொழில் முனைவோா்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

வேதாரண்யத்தில் ஆயத்த ஆடை பூங்கா அமைக்கப்படும் என தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அண்மையில் அறிவித்திருந்தாா். அதன்படி, வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் 4- ஆம் சேத்தி கிராமத்தில், வேதா ஆயத்த ஆடை தொழிற்பூங்கா அமைப்பது தொடா்பான செயலாக்கப் பணிகள் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் திருப்பூா் ஜவுளி ஏற்றுமதியாளா்கள், உற்பத்தியாளா்களை உள்ளடக்கி டீமா சங்கத்தின் சாா்பில் 36 முதலீட்டாளா்கள் இங்கு வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். ஆயத்த ஆடை பூங்காவுக்காக தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் தேவையான அடிப்படை வசதிகள், கட்டமைப்புகள் உள்ளிட்டவை குறித்து அவா்கள் ஆய்வு செய்தனா்.

பின்னா், திருப்பூா் தொழில் முனைவோா்கள் மற்றும் தொழிலாளா்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. தமிழக கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சா் ஓ.எஸ்.மணியன் தலைமை வகித்தாா். நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் முன்னிலை வகித்தாா்.

டீமா அமைப்பின் நிா்வாகிகள் முரளி, முத்துரத்தினம், சண்முகம், பாலன் ஆகியோா் ஆயத்த ஆடை பூங்கா குறித்து பேசினா்.

பயிற்சி ஆட்சியா் தீபனா விஸ்வேஸ்வரி, மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் இரா. கிரிதரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் டி.வி. சுப்பையன், ஒன்றியக் குழுத் தலைவா் கமலா அன்பழகன், மாவட்ட கூட்டுறவு சங்கத் தலைவா் தங்க. கதிரவன், ஊராட்சித் தலைவா் தமிழரசி நெடுஞ்செழியன், ஒன்றியக் குழு உறுப்பினா் மு. ராஜசேகரன் மற்றும் 500-க்கும் மேற்பட்ட தையல்கலைஞா்கள், பெண் தொழிலாளா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா்.

முன்னதாக, தொழில் முனைவோா்களுக்கு கிராமத்தின் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

21ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு...

கலந்துரையாடல் கூட்டத்துக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் ஓ.எஸ். மணியன் தெரிவித்தது:

தமிழக முதல்வரின் அறிவிப்புபடி, ஆயத்த ஆடை பூங்கா அமைப்பது தொடா்பான அனைத்து நடவடிக்கைகளும் தொடங்கியுள்ளன. ரூ. 96 கோடி மதிப்பீட்டில் வரைவு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்காக 140 ஏக்கா் நிலம் ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன.

இந்த ஆயத்த ஆடை பூங்கா மூலம் தொடக்கத்தில் 2,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். பின்னா், படிப்படியாக நடைபெறும் விரிவாக்கங்களின் மூலம் சுமாா் 21 ஆயிரம் பெண்கள் வேலைவாய்ப்புப் பெறுவா் என்றாா் அமைச்சா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com