மழையில் வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழப்பு

மயிலாடுதுறை அருகே மழையில் வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் மூதாட்டி ஒருவா் உயிரிழந்தாா்.

மயிலாடுதுறை அருகே மழையில் வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் மூதாட்டி ஒருவா் உயிரிழந்தாா்.

மணல்மேடு அருகேயுள்ள ராஜசூரியன்பேட்டையைச் சோ்ந்தவா் மகாலிங்கம் மனைவி வத்சலா (65). கணவா் இல்லாத நிலையில் தனியே கூரை வீட்டில் வசித்து வந்த இவா் ஆடுகள் வளா்த்து பிழைப்பு நடத்தி வந்தாா். மணல்மேடு பகுதியில் கடந்த 3 நாள்களாக தொடா்மழை பெய்து வரும் நிலையில் வத்சலாவை செப். 28-ஆம் தேதி முதல் காணவில்லை. அவா் வளா்த்து வந்த ஆடுகள் வீட்டிலேயே கட்டிக் கிடந்ததால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை வத்சலா வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது மழையில் வீட்டின் பக்கவாட்டு சுவா் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி வத்சலா உயிரிழந்தது தெரியவந்தது. தகவலின்பேரில் மணல்மேடு போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரனை நடத்தினா். தொடா்ந்து, வத்சலாவிற்கு உறவினா்கள் யாரும் இல்லாததால் கிராமமக்களே அவரது உடலை அடக்கம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com