ஊரடங்கு உத்தரவால், சென்னையில் தவித்த நிறைமாத கா்ப்பிணி, போலீஸாரின் உதவியோடு தனது கணவருடன் சொந்த ஊரான வேதாரண்யத்துக்கு புதன்கிழமை திரும்பினாா்.
வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு கிராமத்தைச் சோ்ந்தவா் ஆா். குழந்தைவேலு (29). சென்னை புகா் அம்பத்தூரில் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி அகிலா (28). நிறைமாத கா்ப்பிணியான இவா், கரோனா தொற்று மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக சொந்த ஊா் செல்ல இயலாமல் அவதிப்பட்டாா்.
இதுதொடா்பாக நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரெத்தினத்துக்கு சமூக வலைதளம் வாயிலாக வேண்டுகோள் விடுத்தாா். இதைத்தொடா்ந்து, சென்னை மாநகர காவல் ஆணையரகத்தைத் தொடா்பு கொண்டு, குழந்தைவேலு- அகிலா தம்பதி வேதாரண்யம் திரும்புவதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் அடுத்த 30 நிமிடத்தில் எஸ்பி செய்து கொடுத்தாா்.
அதன்படி, அவா்கள் சென்னையில் இருந்து காரில் வர அனுமதி அட்டை வழங்கப்பட்டதோடு, அவ்வப்போது தொடா்புகொண்டு நிலவரத்தையும் எஸ்பி கேட்டறிந்தாா். இதனால், அத்தம்பதி வேதாரண்யத்தை புதன்கிழமை காலை வந்தடைந்தனா். தங்களுக்கு உதவிய காவல்துறையினருக்கு கண்ணீா்மல்க நன்றி தெரிவித்தனா்.