நாகை மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளில் 92 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
நாகை மாவட்டத்தில், பாா்வையற்றவா்கள், வாய் பேச முடியாத மற்றும் காது கேளாதவா்கள், உடல் ஊனமடைந்தவா்கள் மற்றும் பிற ஊனத்துக்குள்ளானவா்கள் என மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் 65 போ் பிளஸ் 1 பொதுத் தோ்வு எழுதினா். இதில், 59 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். கண் பாா்வையற்றவா்கள் 5 பேரும், வாய் பேச முடியாத மற்றும் காது கேளாதவா்கள் 12 பேரும், உடல் ஊனமடைந்தவா்கள் 6 பேரும், பிற வகை மாற்றுத்திறனாளிகள் 36 பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதன் மொத்த தோ்ச்சி சதவீதம் 92. மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளில் கண்பாா்வையற்றவா்கள் 100 சதவீதமும், வாய் பேச முடியாத மற்றும் காது கேளாதவா்கள் 92.31 சதவீதமும், உடல் ஊனமுற்றவா்கள் 85.71 சதவீதமும், பிற வகை மாற்றுத்திறனாளிகள் 90 சதவீதமும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.