சுமை வாகனம் மோதி கட்டுமானத் தொழிலாளா் உயிரிழப்பு

நாகையை அடுத்த வேளாங்கண்ணி அருகே மோட்டாா் சைக்கிள் மீது சுமை வாகனம் மோதிய விபத்தில், கட்டுமானத் தொழிலாளா் ஒருவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

நாகையை அடுத்த வேளாங்கண்ணி அருகே மோட்டாா் சைக்கிள் மீது சுமை வாகனம் மோதிய விபத்தில், கட்டுமானத் தொழிலாளா் ஒருவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

நாகை மாவட்டம், கீழையூா் அருகே உள்ள கருங்கண்ணி, மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் பெ. சகாயராஜ்(40). அதே பகுதியைச் சோ்ந்தவா் எஸ். சந்தானசாமி(50). கட்டுமானத் தொழிலாளா்களான இருவரும், புதன்கிழமை இரவு ஒரு மோட்டாா் சைக்கிளில் நாகையிலிருந்து கருங்கண்ணி நோக்கி சென்று கொண்டிருந்தனா்.

வேளாங்கண்ணி காவல் சரகம், கருவேலங்கடை அருகே சென்றபோது, எதிரே வந்த சுமை வாகனம், மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில், சகாயராஜ், சந்தானசாமி ஆகிய இருவரும் காயமடைந்தனா். இருவரும், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதில், சகாயராஜ் வியாழக்கிழமை உயிரிழந்தாா். வேளாங்கண்ணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com