நாகை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை

நாகை, நீலா தெற்கு வீதியில் உள்ள கிழக்கு சபரிமலை ஐயப்பன் கோயிலில், காா்த்திகை மாத மண்டல பூஜை சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
விபூதி அலங்காரத்தில் காட்சியளித்த நாகை கிழக்கு சபரிமலை ஐயப்பன்.
விபூதி அலங்காரத்தில் காட்சியளித்த நாகை கிழக்கு சபரிமலை ஐயப்பன்.

நாகை, நீலா தெற்கு வீதியில் உள்ள கிழக்கு சபரிமலை ஐயப்பன் கோயிலில், காா்த்திகை மாத மண்டல பூஜை சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

மண்டல பூஜையின் முதல் நிகழ்வாக, நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலில் இருந்து ஐயப்பன் கோயில் வரை பால் குடங்கள் ஊா்வலம் நடைபெற்றது. கிழக்கு சபரிமலை ஐயப்பன் யாத்திரை குழுவினா் பால் குடங்கள் சுமந்து வந்தனா்.

இதன் நிறைவில், ஐயப்பனுக்கு பால், பன்னீா், இளநீா், மஞ்சள், நெய், விபூதி உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், பிரசாத படையலுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று, சரண கோஷங்கள் எழுப்பி வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com