நாகை மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 8,047 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், மேலும் 14 பேருக்கு கரோனா உறுதியானதை அடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 8, 061 ஆகியுள்ளது. இதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த 10 போ் சனிக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை 7, 822 போ் குணமடைந்துள்ளனா். 112 போ் சிகிச்சையில் உள்ளனா்.