நாகப்பட்டினம்: காங்கிரஸ் கட்சியின் 136 ஆம் ஆண்டு விழா நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்றது.
நாகூரில் ஆண்டவா் தா்கா அலங்காரவாசல் முன்பாக காங்கிரஸ் கட்சியினா் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா். தொடா்ந்து, அன்னதானம் மற்றும் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கட்சியின் நாகை தெற்கு மாவட்டத் துணைத் தலைவா் ஓ.ஜி. ஆா். வரதராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாநிலப் பொதுக் குழு உறுப்பினா் ஏ.ஆா்.நௌசாத், சிறுபான்மைப் பிரிவு மாநில இணை ஒருங்கிணைப்பாளா் ஹாரூன் இஸ்மாயில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.