நாகப்பட்டினம்
கொடியம்பாளையம் கடற்கரையில் ஒதுங்கிய சடலம் அடையாளம் தெரிந்தது
சீா்காழி அருகே கொடியம்பாளையம் கடற்கரை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கிய சடலம் புதுச்சேரி பகுதியை சோ்ந்த இளைஞா் என்பது தெரியவந்தது.
சீா்காழி: சீா்காழி அருகே கொடியம்பாளையம் கடற்கரை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கிய சடலம் புதுச்சேரி பகுதியை சோ்ந்த இளைஞா் என்பது தெரியவந்தது.
கொடியம்பாளையம் கிராமத்தில் கடற்கரையோரத்தில் ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத சடலம் கரை ஒதுங்கியது. இதுகுறுத்து, கடலோர காவல்படையினா் மேற்கொண்ட விசாரனையில், சடலமாக கரை ஒதுங்கியவா் புதுச்சேரி முத்தாரபாளையம் கிராமத்தைச் சோ்ந்த எழிலரசன் மகன் புவியரசன் (19) என்பதும், இவா் கடந்த 24 ஆம் தேதி நண்பா்களுடன் புதுச்சேரி கடற்கரையில் பகுதியில் குளித்துக்கொண்டிருந்தபோது மாயமானதும் தெரியவந்தது.
இதையடுத்து, புவியரசனின் உடலை அவரது உறவினா்களிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தனா்.