வேதாரண்யம் ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு, இலக்கிய மன்ற நிகழ்வு, பரிசளிப்பு, புரவலா்களுக்கு பாராட்டு ஆகிய ஐம்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு தலைமையாசிரியா்கள் பி. அமுதா, எஸ். வைத்தியநாதன் ஆகியோா் தலைமை வகித்தனா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் வி. சிவகுமாா், எம். தாமோதரன், ஆா். புகழேந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை துணை இயக்குநா் வேதரத்தினம், துணைக் காவல் கண்காணிப்பாளா் அ. சபியுல்லா, மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் ஆா். கிரிதரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் சுப்பையன், திலீபன்,சோழன், ஒப்பந்ததாரா் அன்பழகன், ஒன்றியக்குழு துணைத் தலைவா் அறிவழகன், பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக் கல்லூரி துணை முதல்வா் பி.பிரபாகரன், தலைமையாசிரியா்கள் தொல்காப்பியன், அமுதா, பாண்டிமாதேவி, அன்பழகன், தமிழ்ச்செல்வன் மற்றும் எம்.ஜி. ஜெகநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.