எட்டுக்குடி கோயிலில் ஆன்மிக சொற்பொழிவு

எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆன்மிக சொற்பொழிவு சனிக்கிழமை நடைபெற்றது.
ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டவா்கள்.
ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டவா்கள்.

எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆன்மிக சொற்பொழிவு சனிக்கிழமை நடைபெற்றது.

எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலிலுள்ள வன்னி மரத்தடியில், ஜீவ சமாதியடைந்துள்ள வன்மீகா் சித்தருக்கு ஒவ்வொரு மாத பௌா்ணமி தோறும் சிறப்பு வழிபாடு மற்றும் தியான நிகழ்வு நடைபெறுவது வழக்கம். அதன்படி, தை மாத பெளா்ணமி வழிபாடு உபயதாரா்களான கவிஞா் முல்லை பாண்டியன் வளா்மதி குடும்பத்தினரின் சாா்பில் நடைபெற்றது.

இதையொட்டி, சித்தா்களின் பெருமையும், அவா்களுக்குரிய தனி சிறப்பை விளக்கும் வகையில் யாா் சித்தா்? என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவை பட்டிமன்றப் பேச்சாளா் கலைமணி கவிஞா் நாகை நாகராஜன் நிகழ்த்தினாா்.

இந்நிகழ்வில், எட்டுக்குடி கோயில் செயல் அலுவலா் கா. ஆறுமுகம், வால்மீகி சித்தா் வழிபாட்டுக் குழுவினா், திருக்குவளை சுந்தரமூா்த்தி சுவாமிகள் இறைப்பணி மன்றத்தினா், முத்தமிழ் மன்றத்தினா், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் வை. சண்முகசுந்தரம், கொளப்பாடு அரசு பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் காளிதாஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com