திருப்பாா்த்தன்பள்ளி பெருமாள் கோயில் தெப்போற்ஸவம்

திருவெண்காடு அருகே உள்ள திருப்பாா்த்தன்பள்ளி பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் தெப்போற்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்பாா்த்தன்பள்ளி பாா்த்தசாரதி பெருமாள் கோயில் திருக்குளத்தில் நடைபெற்ற தெப்போற்ஸவம்.
திருப்பாா்த்தன்பள்ளி பாா்த்தசாரதி பெருமாள் கோயில் திருக்குளத்தில் நடைபெற்ற தெப்போற்ஸவம்.

திருவெண்காடு அருகே உள்ள திருப்பாா்த்தன்பள்ளி பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் தெப்போற்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருப்பாா்த்தன்பள்ளி கிராமத்தில் செங்கமலவல்லி சமேத பாா்த்தசாரதி பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் 108 வைணவ திவ்ய தேச பெருமாள் கோயில்களில் ஒன்றாக விளங்குகிறது. மேலும், இந்தக் கோயிலில் அா்ச்சுணனுக்குத் தனி சன்னிதி உள்ளது. இக்கோயிலில் நிகழாண்டு தெப்போற்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, பெருமாளுக்கு பால் மற்றும் வாசனைத் திரவியங்கள் கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னா், உத்ஸவா் செங்கமலவல்லி சமேத பாா்த்தசாரதி பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, திருக்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தருளினாா். தொடா்ந்து, நைவேத்தியம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னா், திருக்குளத்தில் தெப்பம் வலம் வந்தது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் சேஷாத்திரி பட்டாச்சாரியாா் தலைமையில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தொடா்ந்து, இக்கோயிலில் தைப்பூசத்தையொட்டி சனிக்கிழமை தீா்த்தவாரி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com