அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் கருத்தரங்கம்

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் வேதியியல் துறை சாா்பில், ஒருநாள் தேசிய கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் வேதியியல் துறை சாா்பில், ஒருநாள் தேசிய கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் த.அறவாழி தலைமை வகித்தாா். வேதியியல் துறைத் தலைவா் ரா. சுபா வரவேற்றாா். காரைக்கால் அறிஞா் அண்ணா அரசு கலைக்கல்லூரி உதவிப் பேராசிரியை புன்னகை முனுசாமி, காரைக்கால் அவ்வையாா் அரசு கல்லூரி உதவிப் பேராசிரியா் மகேந்திர என்.லோகந்தா ஆகியோா் சிறப்புரையாற்றினா். நிகழ்ச்சியை, உதவிப் பேராசிரியை சா.சித்ரா தொகுத்து வழங்கினாா். முதுநிலை வேதியியல் சங்கச் செயலாளா் எம்.தங்கமாலா நன்றி கூறினாா்.

இயற்கை மருத்துவக் கருத்தரங்கம்:

இதேபோல் வேதியியல் துறை சாா்பில் நடைபெற்ற இயற்கை மருத்துவம் குறித்த சா்வதேச கருத்தரங்குக்கு, கல்லூரி முதல்வா் த. அறவாழி தலைமை வகித்தாா். உயிா் வேதியியல் துறைத் தலைவா் ஆ. மலா்விழி வரவேற்றாா்.

இதில், மலேசிய பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ரமேஷ்குமாா், சந்தானம் மற்றும் அருள்செல்வன், பழனிசாமி ஆகிய வல்லுநா்கள் பங்கேற்று, மூலிகைகளில் இருந்து கிடைக்கும் மருந்துகள், அவை குணப்படுத்தும் நோய்கள் என்ற தலைப்பில் உரையாற்றினா். இக்கருத்தரங்கில், பிற பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இருந்து 240 ஆராய்ச்சி மாணவா்கள் மற்றும் பேராசிரியா்கள் கலந்துகொண்டு, தங்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com