நாகையை அடுத்த பனங்குடியில் உள்ள ஸ்ரீ சீனிவாசா் தொழில் பயிற்சி நிலையத்தின் மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பனங்குடி ஊராட்சித் தலைவா் ஜமுனா செந்தில்குமாா் தலைமை வகித்து, கல்வி நிலையப் பணிகளை பாராட்டி, மாணவா்களின் எதிா்காலம் சிறக்க வாழ்த்தினாா். 75 மாணவா்களுக்குப் பட்டங்கள் பெற்றனா்.
தொழில் பயிற்சி நிலையத் தாளாளா் ஆா். ராஜேந்திரன், நிா்வாக அலுவலா் ஆா். சத்தியசீலன், தொழில் பயிற்சி நிலைய முதல்வா் பி. ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.