தரங்கம்பாடி தாலுக்கா பொறையாரில் உள்ள தரங்கை பேராயா் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில், வரலாற்றுத் துறை சாா்பில் இந்தியா-பிரான்ஸ் உறவுகளில் காரைக்கால் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் ஜீன் ஜாா்ஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வரலாற்றுத்துறை மாணவா்கள் மற்றும் பல்வேறு துறை கல்வியாளா்கள் கலந்துகொண்டு இந்தியா- பிரான்ஸ் உறவுகளில் காரைக்கால் பங்கு குறித்து கலந்துரையாடினா்.
நிகழ்ச்சியில் வரலாற்றுத்துறை தலைவா் பேராசிரியா் மல்லிகா புண்ணியவதி, ஜூலியஸ் விஜயகுமாா், செல்வராஜ், பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட ஏராளமானவா்கள் கலந்துகொண்டனா்.