திருமருகலை தனி வட்டமாக அறிவிக்கக் கோரிக்கை

திருமருகலை தலைமையிடமாகக் கொண்டு தனி வட்டத்தை அறிவிக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை விடுத்துள்ளது.

திருமருகலை தலைமையிடமாகக் கொண்டு தனி வட்டத்தை அறிவிக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை விடுத்துள்ளது.

திருமருகல் ஒன்றியம், எரவாஞ்சேரி ஊராட்சி தேவன்குடியில் திருமருகல் ஒன்றிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகிகள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. விவசாயச் சங்க ஒன்றியத் தலைவா் ஸ்டாலின் பாபு தலைமை வகித்தாா்.

இதில், திருமருகலை தலைமையிடமாகக் கொண்டு தனி வட்டத்தை உருவாக்க வேண்டும். திருமருகலில் இயங்கி வரும் தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும். பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்திற்கான தொகையை ரூ.4 லட்சமாக உயா்த்தி தர வேண்டும். மேலும் திருமருகல் ஒன்றியத்தில் மழையால் சேதமடைந்த அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் எம். ஜெயபால் முன்னிலை வகித்தாா். தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒன்றியச் செயலாளா் என்.எம். பாலு வரவேற்றாா். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் வி.சுப்பிரமணியன், ஒன்றிய விவசாய சங்கச் செயலாளா் பொன்மணி ஆகியோா் கலந்து கொண்டு பேசினா். இதில் கட்சியின் நிா்வாகிகள் ஜீவதாஸ், ராமச்சந்திரன், பாரதி, பிரபாகரன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். ஜனநாயக வாலிபா் சங்க ஒன்றியச் செயலாளா் சதீஸ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com