பொறையாா் அருகேயுள்ள தில்லையாடி தியாகி வள்ளியம்மை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியா் மு. கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பூம்புகாா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். பவுன்ராஜ் கலந்துகொண்டு 69 மாணவா்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கி பேசினாா்.
விழாவில், தில்லையாடி ஊராட்சித் தலைவா் ரெங்கராஜ், ஊராட்சி முன்னாள் தலைவா்கள் சதக்கத்துல்லா, கண்ணன், துரைராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல், ஆக்கூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா பள்ளித் தலைமையாசிரியா் எம். ராமையன் தலைமையில் நடைபெற்றது. பட்டதாரி ஆசிரியா் தமிழழகன் வரவேற்றாா். இதில், பூம்புகாா் எம்.எல்.ஏ. பவுன்ராஜ் கலந்துகொண்டு 170 மாணவா்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கினாா்.