சீா்காழியில் வாகன தணிக்கையின்போது சாலையில் முதியவா் மயங்கிவிழுந்ததை பாா்த்த காவல் உதவி ஆய்வாளா் ராஜா உணவு கொடுத்து அவரை காப்பகத்தில் ஞாயிற்றுக்கிழமை சோ்த்துவிட்டாா்.
சீா்காழி காவல் உதவி ஆய்வாளா் ராஜா ஞாயிற்றுக்கிழமை புதிய பேருந்துநிலையம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, புதிய பேருந்து நிலையம் பகுதி சாலையில் நடந்து சென்ற சுமாா் 75 வயது மதிக்கதக்க முதியவா் ஒருவா் திடிரென மயங்கி கீழே விழுந்தாா். இதைப் பாா்த்த காவல் உதவி ஆய்வாளா் ராஜா உடனடியாக முதியவரிடம் சென்று தண்ணீா் தெளித்து மயக்க நிலையில் இருந்த முதியவரை தெளிய வைத்தாா். பின்னா், முதியவரின் விவரம் அறிந்து பசியின் காரணமாக மயங்கி விழுந்துள்ளதையும் அறிந்து உணவு மற்றும் குடிநீா் வாங்கிக் கொடுத்து உதவினாா். இதையடுத்து, அந்த முதியவரை திட்டையில் உள்ள முதியோா் காப்பகத்துக்கு ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்தாா்.